search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி-கல்லூரி வாகனங்களில்  இரவு நேரத்தில் டீசல் திருடும் மர்ம கும்பல்
    X

    பள்ளி-கல்லூரி வாகனங்களில் இரவு நேரத்தில் டீசல் திருடும் மர்ம கும்பல்

    • பஸ்கள் மற்றும் வேன்கள் சம்பந்த ப்பட்ட கிராமத்திலேயே நிறுத்த படுகிறது.
    • வாகனங்களில் டீசல் திருட்டு தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி-கல்லூரி வாகனங்களில் இரவு நேரத்தில் டீசல் திருடும் மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்களின் மூலம் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பஸ்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க படுகிறது.

    பெரும்பாலான வாக னங்கள் அந்தந்த கல்வி நிறுவனங்களில் இருந்து காலை நேரத்தில் புறப்பட்டு மாணவ, மாணவிகளை அழைத்து வருகிறது. மீண்டும் மாலை நேரத்தில் மாணவ, மாணவிகளை அவரவர்களின் சொந்த ஊரில் விட்டு விட்டு மீண்டும் அந்தந்த கல்வி நிறுவ னங்களுக்கு வாகனங்கள் திரும்பி வந்து விடுகிறது. இந்தக் கல்வி நிறுவனங்களின் மூலம் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்காக ஒரு சில பஸ்கள் மற்றும் வேன்கள் சம்பந்த ப்பட்ட கிராமத்திலேயே நிறுத்த படுகிறது.

    காலை நேரத்தில் அந்த வாக னங்கள் கிராமப்பு றங்களில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு சென்று விட்டு மீண்டும் மாலை அதே கிராமங்களுக்கு திரும்பி சென்று இரவு நேரங்களில் அந்தந்த கிராமங்களில் வாக னங்கள் நிறுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கிராமப்புறங்களில் நிறுத்தப்படும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் இருந்து இரவு நேரத்தில் ஒரு மர்ம கும்பல் டீசல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திருடு போவது குறித்து சம்பந்த ப்பட்ட வாக னங்களின் டிரைவர்கள் அந்தந்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த 2 மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் நிறுத்தப்படும் வாகனங்களில் இருந்துதான் டீசல் திருட்டு தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    பள்ளி, கல்லூரி வாகனங்களில் அடிக்கடி டீசல் திருட்டு போவதால் கிராமப்புறங்களில் இருந்து மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த தொடர் சம்ப வங்களால அதிர்ச்சிக்கு ள்ளான தனியார் பள்ளி-கல்லூரி நிர்வாகிகள் சம்பந்த ப்பட்ட வாகனங்களின் டிரை வர்கள் மூலம் அந்தந்த போலீஸ் நிலையங்களில் இரவு நேரங்களில் டீசல் திருட்டு குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் டீசல் திருட்டு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் டீசல் திருட்டு குறித்து அந்தந்த போலீஸ் நிலையங்கள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×