search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாணவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்வித்த நாகை கலெக்டர்
    X

    மாணவ-மாணவிகளுடன் செல்பி எடுத்த கலெக்டர் அருண்தம்புராஜ்.

    மாணவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்வித்த நாகை கலெக்டர்

    • 3 மணி நேரம் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு செல்போனில் செல்பி எடுத்து கொடுத்தார்.
    • மாணவர்கள் தாங்கள் எடுத்த செல்பி போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி சார்பில் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    பின்பு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள வந்த நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது மாணவர்கள் கலெக்டரிடம், தங்களது செல்போனை கொண்டு வந்து கொடுத்து செல்பி எடுக்க கூறினர். சற்றும் சளைக்காமல் புன்னகையுடன் 3 மணி நேரம் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு செல்போனில் செல்பி எடுத்து கொடுத்தார்.

    மாணவர்கள் தாங்கள் எடுத்த செல்பி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுமார் 3 மணி நேரம் செல்பி எடுத்து மாணவர்களை மகிழ்வித்த கலெக்டர் அருண்தம்புராஜ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    Next Story
    ×