search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோட்டில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்களை படத்தில் காணலாம்.

    திருச்செங்கோட்டில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைவி பாண்டிமா தேவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைவி பாண்டிமா தேவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அதிகமாக உள்ள காலிப் பணியிடங்களால் ஒரு ஊழியர் 2, 3 மையங்களை பொறுப்பு பார்க்கும் நிலை உள்ளது. 5 ஆண்டு பணி முடித்த குறு மைய ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×