search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டுவாழைத்தார்கள் விலை உயர்வு
    X

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டுவாழைத்தார்கள் விலை உயர்வு

    • பரமத்திவேலூர் காவிரி கரை யோர பகுதிகளில் பல்லாயி ரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் பரமத்தி வேலூர் ஏலச்சந்தைக்கு நேரடியாக வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரை யோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம் பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயி ரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    ஏலச்சந்தை

    சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் ஏலச்சந்தைக்கு நேரடியாக வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது.

    விலை உயர்வு

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×