search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் துணிகரம்மளிகை கடையில் புகுந்து ரூ.4 லட்சம் கொள்ளை
    X

    நாமக்கல்லில் துணிகரம்மளிகை கடையில் புகுந்து ரூ.4 லட்சம் கொள்ளை

    • நாமக்கல் திருச்சி சாலை மாருதி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • நேற்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வெற்றிவேல் தூங்க சென்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் திருச்சி சாலை மாருதி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது வீடு மளிகை கடையின் மேல்தளத்தில் உள்ளது. நேற்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வெற்றிவேல் தூங்க சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் மளிகை கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை மளிகை கடையை திறக்க சென்ற வெற்றிவேல் கல்லாவில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    இதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மளிகை கடை உள்ள பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மளிகை கடையில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×