search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏர்வாடி அருகே தலையாரி வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி
    X

    ஏர்வாடி அருகே தலையாரி வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

    • கணேசன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.
    • பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள உன்னங்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 42).

    இவரிடம் கடந்த 1 ஆண்டுக்கு முன் ஏர்வாடி அருகே உள்ள இளைய நயினார்குளத்தை சேர்ந்த தவசிக்கனி (52), நாங்குநேரி சன்னதி தெருவை சேர்ந்த ஜோதிபாஸ் (42) ஆகிய இருவரும் தலையாரி வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.5 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    ஆனால் கணேசனுக்கு தலையாரி வேலை கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கணேசன் இருவரிடமும் பணத்தை திருப்பி கேட்டார். அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து கணேசன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தவசிக்கனி, ஜோதி பாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணைக்கு பின் இருவரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.

    Next Story
    ×