search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தேசிய மருத்துவர் தின கொண்டாட்டம்
    X

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

    ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தேசிய மருத்துவர் தின கொண்டாட்டம்

    • இதன் மூலம் கொரோணா கால கட்டத்தில் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
    • பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் மருத்துவர்களுக்கு மலர்கொத்து மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.

    மருத்துவர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் மற்றும் மருத்துவர்கள் சேவை குறித்து மாணவரிடம் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, முதல்வர் சமீமா பர்வீன் உரையாற்றினர்.

    பின்னர் மாணவர்கள் இன்ஷியா, பொன் ராஜ்குமார், பெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செம்பா மற்றும் மருத்துவர் இப்ராஹிம் நேர்காணல் நடத்தினர்.

    இதன் மூலம் கொரோணா கால கட்டத்தில் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

    முன்னதாக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் மருத்துவர்களுக்கு மலர்கொத்து மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கி மருத்துவ தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    Next Story
    ×