என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சீர்காழியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
- சீர்காழி புதிய பஸ் நிலையம் பகுதியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் பகுதியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கோஷங்கள்எ ழுப்பியும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் இளம் வாக்காளர்களை ஊக்குவித்தல் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துதல் வாக்குரிமை நமது உரிமை வாக்களிப்பது நமது கடமை என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
முன்னதாக சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் தேர்தல் தனி தாசில்தார் ரஜினி, ஒருங்கிணைப்பாளர் தனியார் பள்ளி தாளாளர் சக்திவீரன், கிராம நிர்வாக அலுவலர் மோகன் உள்ளிட்டோர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை வாசிக்க அதனை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்