search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
    X

    தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    சீர்காழியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

    • சீர்காழி புதிய பஸ் நிலையம் பகுதியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் பகுதியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

    பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கோஷங்கள்எ ழுப்பியும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் இளம் வாக்காளர்களை ஊக்குவித்தல் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துதல் வாக்குரிமை நமது உரிமை வாக்களிப்பது நமது கடமை என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

    முன்னதாக சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் தேர்தல் தனி தாசில்தார் ரஜினி, ஒருங்கிணைப்பாளர் தனியார் பள்ளி தாளாளர் சக்திவீரன், கிராம நிர்வாக அலுவலர் மோகன் உள்ளிட்டோர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை வாசிக்க அதனை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.

    Next Story
    ×