search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பென்னாகரம் அருகே  வாலிபர் மர்மச்சாவு
    X

    பென்னாகரம் அருகே வாலிபர் மர்மச்சாவு

    • குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
    • தொட்டம் புதூர் பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள மடம் பகுதியை சேர்ந்த கோவிந்தன். இவரது மகன் மிதுன்குமார் (வயது28). இவர் ஒகேனக்கல் குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் பென்னாகரம் அருகே உள்ள பெரிய தொட்டம் புதூர் பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தூக்கில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எவராவது அடித்து கொல்லப்பட்டாரா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×