search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே  கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை
    X

    கிருஷ்ணகிரி அருகே கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

    • தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த கடனை அடைக்க முடிவு செய்துள்ளார்.
    • மனமுடைந்த சின்னசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தொடுகனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 58).விவசாயியான இ வருக்கு கடன் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த கடனை அடைக்க முடிவு செய்துள்ளார்.

    ஆனால் அவரது குடும்பத்தினர் அதை ஏற்கவில்லை.மேலும் சின்னசாமியின் மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதில் மனமுடைந்த சின்னசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து கே.ஆர்.பி.அணை போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தளி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி. நாராயணசாமி (42) என்பவர் குடிக்க மனைவி பணம் த ரவில்லை என்பதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×