search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே: 2 தரப்பினர் பயங்கர மோதல்- கடை, வீடுகள் சூறை:  பதட்டம்- போலீஸ் குவிப்பு
    X

    பண்ருட்டி அருகே: 2 தரப்பினர் பயங்கர மோதல்- கடை, வீடுகள் சூறை: பதட்டம்- போலீஸ் குவிப்பு

    பண்ருட்டி அருகே 2 தரப்பினர் பயங்கர மோதலால் கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டனர்.

    கடலூர்

    பண்ருட்டியை சேர்ந்தவர்கள் கொளஞ்சி, சுரேஷ். இவர்கள் இருவரும் பண்ருட்டி அருகே கடைநடத்தி வருகின்றனர். நேற்று இரவு இவர்களது கடைக்கு பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த 2 பேர்உணவு சாப்பிட வந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் இவர்கள் இருவரும்தாக்கப்பட்டாதாக கூறபடுகிறது. ஆத்திரமடைந்த பனப்பாக்கத்தை சேர்ந்த 50 பேர் பயங்கர ஆயுதங்களுடன் ராசாபாளையத்திற்கு வந்தனர். அங்கு ரோட்டோரத்தில் இருந்த பாஸ்ட் புட் கடை, பானி பூரி கடை மற்றும் வீடுகளையும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களையும் அடித்து நொறுக்கினர் அந்த வழியாக வந்தவர்களை தடியால் தாக்கினார்.

    இதனால் ராசா பாளையம் கலவர பூமியாக மாறியது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. எனவே அதிகளவு போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்தி உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×