என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பண்ருட்டி அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் கடத்தல்
Byமாலை மலர்7 Sep 2022 8:28 AM GMT
- மோகனாவுக்கு நாளை (8-ந் தேதி) திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த இளம்பெண் மோகனா கடந்த 5-ந் தேதி திடீரென மாயமானார்.
- பெற்றோர் மோகனாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் சின்ன காலனி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பாபு. அவரது மகள் மோகனா (வயது 19). இவருக்கு நாளை (8-ந் தேதி) திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த இளம்பெண் மோகனா கடந்த 5-ந் தேதி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மோகனாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் மோகனா கிடைக்கவில்லை.
இதுகுறித்து பாபுவின் மனைவி மின்னல்கொடி புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் மனுவில் திருவாமூரை சேர்ந்த ஜெயக்குமார் (26) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், மோகனாவை கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மோகனா எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகி றார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X