search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை அருகே   காரில் 300 மது பாட்டில்கள் கடத்திய  3 வாலிபர்கள் கைது
    X

    ஊத்தங்கரை அருகே உள்ள காட்டேரி பகுதியில் தனி படை ரோந்து சென்ற போது கள்ளத்தனமாக காரில் மது பாட்டில்களை கடத்திபிடிபட்ட சக்திவேல், சிவபாலன்,மணி.அவர்களை கைது செய்த தனிப்படை போலீஸார்.

    ஊத்தங்கரை அருகே காரில் 300 மது பாட்டில்கள் கடத்திய 3 வாலிபர்கள் கைது

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சுமார் 300 பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் அறிவுறுத்தலின்படி, காவல் துணை கண்காணிப்பாளர் அமல அட்வின் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், குற்றப்பிரிவு காவலர்கள் ஹனுமந்த தீர்த்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், அதில் சுமார் 300 பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்தவர்கள் ஹனுமந்த தீர்த்தத்தை சேர்ந்த லோகநாதன் மகன் சக்திவேல் (வயது 34),சிவபாலன் (31) மற்றும் தருமபுரி மாவட்டம் மாம்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை மகன் மணி (25) என்பது தெரிய வந்தது.

    3 பேரையும் கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஊத்தங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×