search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டவுன் கல்லணை பள்ளியில் புதிய கட்டிடங்களை விரைவாக கட்ட வேண்டும்- மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை
    X

    நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோரிடம் கம்யூனிஸ்ட் கட்சியினர் கல்லணை பள்ளி அடிப்படை வசதி மேம்படுத்த கோரி மனு கொடுத்த போது எடுத்தபடம்.

    டவுன் கல்லணை பள்ளியில் புதிய கட்டிடங்களை விரைவாக கட்ட வேண்டும்- மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை

    • பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். துணை மேயர் ராஜு முன்னிலை வகித்தார்.

    பா.ஜனதா மனு

    பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி அளித்த மனுவில், பாளை மண்ட லத்துக்குட்பட்ட 33-வது வார்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அருகே சுகாதாரத் துறையை சேர்ந்த ஊழியர்கள் பாளை மாண்டல பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, கட்டிடக்கழிவுகளை குவித்து வைத்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    பாளை மகாராஜா நகர் பொதுமக்கள் அளித்த மனுவில், நெல்லை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே வணிக ரீதியான மற்றும் பொதுமக்கள் குடிபுகாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்குவதை கோடை காலம் முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கல்லணை பள்ளி

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை தாலுகா குழு செயலாளர் துரை நாராயணன் அளித்த மனுவில், கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 4,300 மாணவிகள் பயின்று வருகின்றனர். பழைய கல்லணை கட்டிடத்திலும் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். மாநகர மக்களின் பெண் குழந்தைகள் படிப்பதற்கு இங்கு கட்டிடங்கள் போதுமானதாக இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக காலை, மாலை என சுழற்சி முறையில் மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த பழைய கல்லணை பள்ளியில் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு சுமார் 4 வருடங்களாக புதிய கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. பழைய கல்லணை பள்ளியில் 56 ஆசிரியர்களுக்கு 2 கழிப்பிடம் தான் உள்ளது. எனவே கூடுதல் கழிப்பிடம் கட்டித் தர வேண்டும். தினசரி பயன்படுத்தும் பகுதியான குடிநீர் குழாய், கைகள் கழுவும் பகுதிகளையும் சீரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பழைய பேட்டை வாணியர் தெற்கு தெருவை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் அளித்த மனுவில், சந்திப்பு ரெயில் நிலையம் செல்லும் சாலையில் ஓரத்தில் இட்லி வியாபாரம் செய்து வந்தேன். போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அதனை அதிகாரிகள் அகற்றி விட்டனர். எனவே எனக்கு இட்லி கடை நடத்துவதற்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    Next Story
    ×