search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
    • ஊட்டியில் உள்ள பெரும்பாலான காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்கள் சுற்றுலாபயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    எத்தனை வாகனங்கள் வருகின்றன, எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை ஆன்லைன் மூலம் பதிவு செய்த பிறகே சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர முடியும். இதனை ஆய்வு செய்வதற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் சுற்றுலா வாகனங்களை சோதித்தபிறகே மாவட்டத்துக்குள் அனுமதிக்கிறார்கள்.

    இ-பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் ஊட்டி காட்டேஜ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரபு, செயலாளர் மகேந்திரன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    ஊட்டியில் காட்டேஜ் மற்றும் லாட்ஜில் முன்பதிவு செய்தவர்கள் தற்போது அதனை ரத்து செய்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக ஊட்டியில் உள்ள பெரும்பாலான காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்கள் சுற்றுலாபய ணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள், ஓட்டல், காட்டேஜ் உரிமையாளர்கள் உள்பட அனைத்து வியாபாரிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இ-பாஸ்சை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் ஒரு நாள் அனைத்து வியாபாரிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து கடையடைப்பு போராட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வியாபாரிகளும் ஆதரவு அளித்தால் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அந்தந்த சோதனை சாவடிகளிலேயே இ-பாஸ் பெற்று தரப்படுகிறது.
    • இ-பாஸ் கட்டாயம் என்ற விழிப்புணர்வு வாசகம் அவசியம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு, நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

    இதனை பரிசாத்த முறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று வரும் நடைமுறை கடந்த 7-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் இ-பாஸ் இல்லாமல் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாபயணிகளின் வாகனங்களுக்கு எந்தவொரு சிரமமின்றி இ-பாஸ் கிடைத்திடும் வகையில் அந்தந்த சோதனைச் சாவடிகளிலேயே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பணியாளர்களை இ-பாஸ் பதிவு செய்யும் பணிகளில் ஈடுபடுத்தி இ-பாஸ் பெற்று தரப்படுகிறது.

    மேலும் மாவட்டத்தில் உள்ள துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்களை கொண்டு மேற்காணும் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி முதல் நேற்று 8-ந் தேதி மாலை வரை சுமார் 3 லட்சத்து 17 ஆயிரத்து 102 சுற்றுலாபயணிகள், 58 ஆயிரத்து 983 வாகன ங்களில் பயணம் செய்ய இ-பாஸ் முறையில் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தர பதிவு செய்துள்ளனர்.

    இ-பாஸ் நடைமுறை குறித்து சுற்றுலாபயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் தங்கும் விடுதிளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், தாங்கள் வழங்கும் அறை முன்பதிவிற்கான ரசீதில் நீலகிரி மாவட்டத்துக்குள் வருகை தருவதற்கு இ-பாஸ் கட்டாயம் என்ற விழிப்புணர்வு வாசகம் அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கோடைவிழா ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது.
    • 388 ரகங்களை சேர்ந்த 65 ஆயிரம் மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மலைவாச சுற்றுலா தலங்களில் ஊட்டி முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

    இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டுதோறும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது.

    நாளை தொடங்கும் மலர் கண்காட்சியானது வருகிற 20-ந் தேதி வரை நடக்க உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோ னியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், வில்லியம், சூரியகாந்தி, சப்னேரியா போன்றை பூங்காவலில் உள்ள பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்து கொண்டிருக்கிறது.

    தயார் செய்யப்பட்ட 388 ரகங்களை சேர்ந்த 65 ஆயிரம் மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.


    இந்த முறை பல வண்ணங்களை கொண்ட ஒரு லட்சம் ரோஜா மலர்களை கொண்டு பிரமாண்ட டிஸ்னி வேர்ல்டு, காளான், ஆக்டோபஸ் மற்றும் மலர் கோபுரங்கள் உள்பட 10 வகையான மலர் அலங்காரங்கள் பல லட்சம் ரோஜா மலர்கள், கார்னேசன் மற்றும் செவ்வந்தி மலர்களை கொண்டு அலங்காரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதற்காக பெங்களூரு, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன் மலர்கள் ஊட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

    இதுதவிர பல ஆயிரம் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள், ரங்கோலி அமைக்கப்பட்டு ள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் வனவிலங்குகளின் உருவங்கள், கார்ட்டுன் பொம்மைகளும் மலர்களால் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.

    தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மலர் கண்காட்சியின் சிறப்பு நிகழ்வாக கண்காட்சி தொடங்கும் நாளை மற்றும் நிறைவடையும் நாளான 20-ந் தேதி ஆகிய 2 நாட்கள் லேசர் லைட் ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மலர் கண்காட்சிக்காக மேடை அமைத்தல், அரங்குகள் அமை த்தல், பணிகள் நடந்து வருகிறது.

    கார்னேசன் மலர்களை கொண்டு அலங்காரங்கள் அமைப்பதற்காக இரும்பு கம்பிகள் மூலம் ரெயில் உள்ளிட்டவைகளின் வடிவங்களும் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

    சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பூங்காவில் செய்யப்பட்டு ள்ளது.

    இதேபோல் ஊட்டி விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள ரோஜா பூங்காவில் நாளை ரோஜா கண்காட்சியும் தொடங்குகிறது.

    4200க்கும் மேற்பட்ட ரகங்களில் உள்ள 32 ஆயிரம் பல வண்ண ரோஜா செடிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தயார் நிலையில் உள்ளன.

    இ-பாஸ் நடைமுறை யால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ள நிலையில், மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்குவதால் வரக்கூடிய நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இ-பாஸ் பெற்றே வருகின்றனர்.
    • ஊட்டியில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரிக்கு ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இ-பாஸ் பெற்றே வருகின்றனர்.

    இ-பாஸ் விண்ணப்பித்த உடனே கிடைத்து விடுகிறது. இருந்தாலும் பெரும்பாலானோர் இ-பாஸ் எடுத்து செல்ல வேண்டும் என்பதால் வருவதில் சற்று தயக்கமே காட்டி வருகின்றனர்.

    நீலகிரியில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

    நேற்று முன்தினம் தாவரவியல் பூங்காவிற்கு 25,600 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில் நேற்று 11,600 சுற்றுலா பயணிகள் மட்டுமே பூங்காவை சுற்றி பார்க்க வந்துள்ளனர். இதேபோல் ரோஜா பூங்காவுக்கு 5 ஆயிரத்து 750 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்கா 2,751 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 555 பேரும், தேயிலை பூங்கா 909 பேரும், மரவியல் பூங்காவுக்கு 80 பேரும் என மொத்தம் ஒரு நாளில் 21 ஆயிரத்து 680 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

    வழக்கமாக கோடை சீசனையொட்டி ஒவ்வொரு நாளும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதும். வியாபாரமும் களைகட்டும்.

    ஆனால் இ-பாஸ் நடைமுறையால் நேற்று ஊட்டியில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    தொழில் பாதிப்பு கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த சமயத்தில் தான், எங்களுக்கு வியாபாரமும் நன்றாக நடக்கும். இந்த சீசன் காலத்தில் நடக்க கூடிய வியாபாரம் மூலமாகவே எங்களுக்கு ஓரளவு வருமானமும் வரும்.

    அந்த வருமானத்தை வைத்து தான் சீசன் இல்லாத நேரங்களில் சமாளித்து வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில் சீசன் நேரத்திலும் இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    இதனால் வியாபாரம் முற்றிலும் பாதிப்படை ந்து, எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் 2 லட்சத்து 80 ஆயிரம் சுற்றுலா பயணிகளில் 40 ஆயிரம் பேராவது வந்திருப்பார்களா என்பது சந்தேகமே. இனி மழை காலம் தொடங்கி விடும் என்பதால் சுற்றுலா வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் வருமானம் இழப்பதோடு அதை சார்ந்து வாழும் பல லட்ச குடும்பங்களும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • இ-பாஸ் பெறுவதற்கு என்று பிரத்யேகமாக https://epass.tnega.org என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இ-பாஸ் நடைமுறை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக கோடை சீசன்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து தமிழக அரசு சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. இ-பாஸ் பெறுவதற்கு என்று பிரத்யேகமாக https://epass.tnega.org என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மேலும் இந்த இ-பாஸானது 3 வகை அடையாளக் கோடுகளுடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உள்ளூர் பொதுமக்களுக்கு பச்சை நிற இ-பாசும், வேளாண் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படை தேவை, சரக்கு வாகனங்களுக்கு நீல நிற இ-பாசும், வர்த்தகம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஊதா நிறத்திலும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசு பஸ்களில் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும், அரசு பஸ்களில் வருபவர்களின் விவரங்கள் போக்குவரத்து துறை மூலம் பெறப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த இணையதளத்தில் சென்று இ-பாசுக்கு விண்ணப்பித்தனர். அதில், சுற்றுலா பயணிகள் எங்கிருந்து வருகிறீர்கள். எத்தனை நாள் இங்கு தங்க உள்ளீர்கள் என பல்வேறு விவரங்கள் அதில் கேட்கப்பட்டிருந்தது. அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை பூர்த்தி செய்து சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்றுக்கொண்டனர். விண்ணப்பித்த உடனே எளிதாக இ-பாஸ் கிடைத்ததால் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நேற்று ஒரே நாளில் நீலகிரி வருவதற்கு 21,446 வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளன. இதில் 2 லட்சத்து 78 ஆயிரம் பேர் நீலகிரிக்கு வருகை தர உள்ளனர்.

    இன்று காலை முதல் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. நீலகிரிக்கு வந்த அனைத்து வாகனங்களுமே தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    மாவட்ட எல்லைகளில் உள்ள கல்லார், நாடுகாணி, தொரப்பள்ளி, சோலாடி, பாட்டவயல் உள்பட 16-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் சோதனை சாவடி வழியாக ஊட்டிக்கு வரும் தனியார் பஸ்கள், வேன்கள், கார்கள், சரக்கு வாகனங்கள், லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அவர்கள் இ-பாஸ் பெற்றுள்ளனரா? என்பதை கண்காணிக்கின்றனர்.

    அவர்களிடம் இ-பாஸ் இருக்கிறதா என்று கேட்டு விசாரிக்கும் போலீசார் இ-பாஸ் இருந்தால் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதித்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகள், வர்த்தக வாகனங்கள் தங்களுக்கான ஊதா நிறத்திலான இ-பாசையும், உள்ளூர் வாகனங்கள் தங்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள பச்சை நிற இ-பாசை காண்பித்து சென்று வருகின்றனர்.

    அவர்கள் நீலகிரிக்குள் சென்றதும் அங்குள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம் உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்கின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    நேற்று இரவு முதல் மழை பெய்ததால் தற்போது ஊட்டியில் குளு,குளு காலநிலை நிலவி வருகிறது. இதனை அங்கு வந்திருக்கும் சுற்றுலா பயணிகள் ரசித்து அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த இ-பாஸ் நடைமுறை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. வாகனங்கள் உடனுக்குடன் சென்றதால் வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர். இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • குன்னூர்-கோத்தகிரி சாலை அடுத்த வட்டப்பாறை பகுதியில் மின்கம்பம் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • டால்பின் நோஸ்-லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு செல்லும் வழியில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அனல் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் மாவட்ட அளவில் வெயிலின் தாக்கம் மேலும் கூடுமென எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. பின்னர் அங்கு சூறாவளி காற்றுடன் கோடைமழை வெளுத்து வாங்கியது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் தணிந்து மீண்டும் குளுகுளு காலநிலை தலை தூக்கியதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கோத்தகிரி பகுதியில் கடந்த 2 நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் இதமான காலநிலை நிலவியது. இந்த நிலையில் அங்கு நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது.

    இதனால் அங்குள்ள நீரூற்றுகள், கிணறுகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.

    கோத்தகிரியில் கடும் வறட்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வந்த நிலையில் அங்கு சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் நீராதார பகுதிகளில் தண்ணீர் தேங்கி குடிநீர் பிரச்சினை தீருமென பொதுமக்கள் நிம்மதி தெரிவித்து உள்ளனர்.

    குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் லேம்ஸ்ராக் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் அங்கு நின்றிருந்த கார்கள் சேதம் அடைந்தன.

    ஊட்டியில் கடந்த சில நாட்களாகவே விட்டுவிட்டு மழை பெய்துவந்த நிலையில் நேற்று மதியம் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் அங்கு வெப்பத்தின் தாக்கம் பெருமளவில் குறைந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது. மேலும் பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் கரை புரண்டோடியது.

    அதிலும் குறிப்பாக கமர்சியல் சாலையில் குளம் போல் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகனங்கள் செல்வதிலும் சிரமநிலை ஏற்பட்டது. அதே போல பஸ் நிலையம் அருகிலுள்ள ரெயில் பாலத்தின் அடியில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது.

    ஊட்டியில் கோடை விழா சீசன் தொடங்க உள்ள நிலையில் தாவரவியல் பூங்காவில் புல்வெளிகள் மீண்டும் பச்சைப்பசேல் பசுமைக்கு மாறி இருப்பதால் தோட்டகலை துறையினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஊட்டி, குன்னூருக்கு குடிநீர் வழங்கும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் குன்னூர், அருவங்காடு, வெலிங்டன், காட்டேரி, சேலாஸ், கரும்பாலம், மரப்பாலம், அடார், சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கோடை மழையால் அந்த பகுதிகளில் மீண்டும் பசுமை திரும்பி உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் கோடை மழையில் நனைந்தபடி அங்குள்ள பகுதிகளை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே குன்னூரில் கோடை மழை காரணமாக அந்த பகுதிகளில் 6 முறை மின் தடை ஏற்பட்டது.

    மேலும் குன்னூர்-கோத்தகிரி சாலை அடுத்த வட்டப்பாறை பகுதியில் மின்கம்பம் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்ததும் மின்ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் டால்பின் நோஸ்-லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு செல்லும் வழியில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வழிகாட்டு நெறிமுறைகளை நீலகிரி ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ளார்.
    • அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை.

    சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை நீலகிரி ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும்.

    ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் மட்டுமே போதுமானது.

    இந்த நடைமுறை மே 7 முதல் மே 30 வரை சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

    அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை.

    வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தும், உள்நாட்டு மக்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்தும் இபாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நேற்று அரைமணிநேரம் கோடை மழை கொட்டித்தீர்த்தது.
    • பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் வழக்கமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை (700மி.மி), அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை (300 மி.மி), ஏப்ரல்-மே மாதங்களில் கோடை மழை (250 மி.மி) வீதம் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

    மேலும் அக்னி நட்சத்தி ரம் தொடங்குவதற்கு முன்பாகவே நீலகிரி பகுதியில் வழக்கத்தைவிட அதிகமாக, சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதால் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதற்கிடையே ஏப்ரல் முதல் வாரத்தில் நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று அரைமணிநேரம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் ஆறாக வழிந்தோடியது.

    மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. நீலகிரியில் வெளுத்து வாங்கிய கோடை மழையால் அங்கு நீண்ட நாட்களாக நீடித்து வந்த அனல் வெப்பம் தணிந்து தற்போது மீண்டும் குளுகுளு காலநிலை திரும்பி உள்ளது. இதனால் அங்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    மேலும் அவர்கள் கொட்டும் மழைக்கு மத்தி யில் பூங்காவில் குழந்தை களுடன் சேர்ந்து விளையாடி யதை காண முடிந்தது. ஊட்டி பகுதியில் நேற்று பகல் நேரத்தில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், காற்றில் 73 சதவீதம் ஈரப்பதமும் நிலவியது.

    கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய 3 மாநில ங்கள் இணையும் கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கோடை மழையால் அங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அனல் வெயில்-புழுக்க த்தால் தவித்துவந்த மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். மேலும் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் ஆகியோரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    • பாறை இடுக்குகளில் தண்ணீர் தேடும் யானைகள்.
    • தண்ணீரை தேடி மலை அடிவார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தை யொட்டிய மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருவ தால் அங்கு உள்ள காட்டு யானைகள் தற்போது வனத்தில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீரை தேடி மலை அடிவார பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றன.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கே.என்.ஆா்.பகுதி க்கு 6 காட்டு யானைகள் வந்தன. அவை அங்குள்ள பாறைகளின் நடுவே தண்ணீர் கிடைக்கிறதா என தேடி பார்த்தன.

    அப்போது பாறைகளின் நடுவில் ஆங்காங்கே தேங்கிக் கிடந்த குட்டைகளில் உள்ள தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சிக் குடித்தன. பின்னர் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றி சூட்டை தணித்துக்கொண்டு மீண்டும் காட்டுக்குள் திரும்பி சென்றன.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை பகுதியில் பாறை இடுக்குகளில் தண்ணீர் தேடும் யானைகள் குறித்து வனவியல் ஆய்வாளர்கள் கூறுகையில், `நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளுக்கான குடிநீா் தேவையும் அதிகரித்து உள்ளது.

    எனவே காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் கோடைக்காலம் முடியும்வரை தண்ணீரை நிரப்பவும், குட்டைகளை கண்காணிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அமைச்சர் சேகர்பாபு தனது குடும்பத்தினருடன் குன்னூருக்கு வந்தார்.
    • அவர் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன், விநாயகர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இதில் சிதலமடைந்து இருந்த சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கு 72 லட்சம் ரூபாய் மற்றும் விநாயகர் கோவிலுக்கு 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தனது குடும்பத்தினருடன் குன்னூருக்கு வந்தார். அவரை தி.மு.க தொண்டர்கள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து அவர் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து பக்தர்களுக்கு வாழைப்பழங்களை பிரசாதமாக வழங்கினார். பின்னர் சுப்பிரமணியர் சுவாமி கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் நடப்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    கோவிலில் உள்ள திருமண மண்டபத்தை ஆய்வு செய்த அவர், மண்டபத்தை சீரமைக்க சிறப்பு நிதி ஒதுக்குவதாகவும், மேல் தலத்தில் அன்னதானத்திற்கான இடம் அமைத்தல் மற்றும் பார்க்கிங் வசதி செய்வதற்கான சிறப்பு நிதியை ஒதுக்கி அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்தார்

    • வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது.
    • இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.

    ஊட்டி:

    நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது. மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் தயார் செய்யப்பட்ட 388 ரகங்களில் 65 ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் காட்சிப்படுத்தும் பணியை கலெக்டர் அருணா இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஊட்டியில் வருகிற 10-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. 10-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை என 10 நாட்கள் இந்த கண்காட்சி நடக்க உள்ளது.

     மலர் கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.75 ஆகவும், பெரியவர்களுக்கு ரூ.150 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர ரோஜா கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சியும் நடத்த உள்ளோம் ரோஜா கண்காட்சி வருகிற 10-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.

    பழ கண்காட்சி 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. ரோஜா கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.500, பெரியவர்களுக்கு ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் மொத்தம் 6.5 லட்சம் மலர்கள் மக்கள் பார்வையிட வைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், நீலகிரியில் அமல்படுத்தப்பட உள்ள சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கலெக்டர் அருணா, இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.

    • கடந்த 2 நாட்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவை 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.
    • ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே மிக முக்கியமான சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்ளது.

    இங்கு நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கோடை சீசன் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக வெயிலில் இருந்து தப்பிக்கவும், கோடை கால விடுமுறையை கொண்டாடவும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    இதேபோல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு ரசித்து செல்கிறார்கள்.

    மே தின விடுமுறையை கொண்டாடும் வகையில் கடந்த 30-ந்தேதி முதலே சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். நேற்று காலையும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்கள், வேன், பஸ் போன்ற வாகனங்களில் ஊட்டிக்கு வந்தனர்.

    இதனால் நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த மக்கள், அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளில் பூத்து குலுங்கிய பூக்களை கண்டு ரசித்து, அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    50 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். மாலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் அங்குள்ள புல்தரையில் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசி, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து பொழுதை கழித்தனர்.

    கடந்த 2 நாட்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவை 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

    ஊட்டியில் உள்ள அனைத்து ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து அதிகளவிலான சுற்றுலா வாகனங்கள் வந்து கொண்டே இருப்பதால், போக்குவரத்து பாதிக்காத வகையில் ஊட்டி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

    ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோடை மழை பெய்யாத நிலையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.

    தற்போது காலதாமதமாக பூங்காவில் பசுமை திரும்பி, ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் ரோஜாபூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். பலர் பூக்களுடன் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் வருகிற 10-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது. வழக்கமாக ஒரு வாரத்துக்கு மட்டுமே மலர் கண்காட்சி நடத்தப்படும். முதன்முறையாக தற்போது 10 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து மலர் செடிகளையும், மலர்களையும் பாதுகாக்க பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது தண்ணீரை தெளித்து மலர்ச்செடிகளை பாதுகாத்து வருகிறார்கள்.

    ×