search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
    • போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

    அப்போது மஞ்சூர், தங்காடு, மணலாடா, இத்த லார், எம்.மணியட்டி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுப்பயிராக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மட்டு மல்லாமல் பழ வகைகளும் பயிரிடப்பட்டன.

    இந்த காய்கறிகளுக்கு ஊட்டி, கோவை, சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இதனால் ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் அறுவடைக்கு தயாராகியும் முட்டைகோஸ் அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அப்படியே விடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.15 முதல் ரூ.20 வரை விலை கிடைத்தது. தற்போது ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.10 மட்டுமே விலை போகிறது

    இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டுள்ளனர். நாளடைவில் இந்த முட்டைகோஸ்கள் அழுகி மண்ணோடு மண்ணாகி விடும்.

    • 6 வயது ஆண் காட்டெருமை பாறையில் இருந்து சறுக்கி விழுந்தது.
    • கால்நடை மருத்துவர் நந்தினி இறந்த காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனிடையே கிராம பகுதிகளில் மட்டுமல்லாமல் நகர பகுதிகளிலும், பகல் நேரங்களிலும் காட்டெருமைகள் சர்வ சாதராணமாக உலா வருகின்றன.

    சாலைகளின் நடுவிலும், ஒரத்திலும் நடந்து செல்வதால், வாகன ஓட்டிகளும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே அந்த வழியாக பயணித்து வருகின்றனர்.

    குன்னூர் அருகே உள்ள சேலாஸ் சோல்ராக் செல்லும் சாலையில் நீர்மம்பட்டி என்ற இ்டத்தில் மலைச்சரிவில் 2 காட்டெருமைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருந்தது.

    இதில் 6 வயது ஆண் காட்டெருமை பாறையில் இருந்து சறுக்கி விழுந்தது. இதில் காட்டெருமை காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் மற்றும் வன பாதுகாவலர் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய வனக்குழுவினர் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் கால்நடை மருத்துவர் நந்தினி இறந்த காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதனையடுத்து காட்டெருமையின் உடலை அங்கேயே புதைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், காட்டெருமைகளை விரட்ட வனக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆங்காங்கே நின்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • தி.மு.க ஆட்சி அமைத்ததும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
    • தன்னலம் பார்க்காமல் சுயநலம் பார்க்காமல் செயல்படுபவர்கள் தி.மு.க.வினர் தான்.

    ஊட்டி:

    ஊட்டியில் நடந்த இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    இந்தியாவிலேயே கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிய ஒரே கட்சி தி.மு.க. தான். தி.மு.க.வில் எத்தனை அணிகள் இருந்தாலும் முதன்மையான அணி இளைஞரணி தான்.

    நாட்டிலேயே இளைஞரணி என்பது முதன் முதலில் தி.மு.க.வில் தான் தொடங்கப்பட்டது.

    2 மாதத்திற்கு முன்பு மதுரையில் மாநாடு நடந்தது. ஒரு மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு அந்த மாநாடே உதாரணம். மதுரையில் நடந்தது கேலிக்கூத்தான மாநாடு.

    பா.ஜ.க.வினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம் தான். என்னை பற்றியே பேசி கொண்டிருக்கின்றனர். நான் ஒரு அரங்கத்தில் பேசினேன். அதில் பிறப்பால் அனைவரும் சமம் என்று மட்டுமே பேசினேன். ஆனால் நான் பேசாததை பேசியதாக திரித்து கூறி வருகின்றனர்.

    எங்கு போனாலும் தி.மு.க.வை பற்றி பேசுவதே அமித்ஷாவுக்கு வேலையாக உள்ளது. பொய் குற்றச்சாட்டுகளை சொல்வதில் அமித்ஷா வல்லவர். அதுபோல பிரதமரும் இதையே பேசி வருகின்றனர்.

    ஒட்டுமொத்த தமிழ்நாடும் கலைஞரின் குடும்பம் தான்.

    தன்னலம் பார்க்காமல் சுயநலம் பார்க்காமல் செயல்படுபவர்கள் தி.மு.க.வினர் தான்.

    தி.மு.க ஆட்சி அமைத்ததும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தி.மு.க. அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    பள்ளி மாணவர்களின் பசியை போக்கிய ஆட்சி தான் தி.மு.க. மாணவ சமுதாயத்தினருக்கு பல்வேறு நலத்திடங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டு குழந்தைகளின் பாதுகாவலராக தி.மு.க அரசு உள்ளது.

    மத்திய அரசு 9 வருடங்களில் செய்த ஊழல்களை சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலமாகிவிட்டது. மத்திய அரசால் பலன் அடைந்தது என்று பார்த்தால் அது அதானி குடும்பம் மட்டுமே. கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தல் போன்று, 2024 பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பந்தலூர் பகுதியிலும் அவரை வரவேற்க ஏராளமான குழந்தைகள், காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
    • தனியார் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவை தொடங்கி வைக்கிறார்.

    ஊட்டி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு பாராளுமன்ற தொகுதி எம்.பியுமான ராகுல்காந்தி கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு, கண்ணூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு நேற்று வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் தனது தொகுதியான வயநாடு பகுதிக்கு சென்றார்.

    வயநாடு தொகுதிக்குட்பட்ட மலப்புரம் மாவட்டம் நிலம்பூர், எடக்கரா பகுதிகளில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    பின்னர் அவர் அங்கிருந்து காரில் தமிழக கேரள எல்லையான நாடுகாணி, சேரம்பாடி வழியாக வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரிக்கு சென்றார்.

    முன்னதாக மாநில எல்லையான நாடுகாணி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கோஷி பேபி, கூடலூர் நகராட்சி துணைத்தலைவர் சிவராஜ் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்திக்கு சால்வை அணிவித்தும், பூங்கொதது அளித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி தொண்டர்களுடனும் கைகுலுக்கினார். அப்போது தொண்டர்கள் சிலர் ராகுலுடன் போட்டி, போட்டு செல்பி புகைப்படம் எடுத்தனர்.

    தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர், கூடலூர் நிலபிரச்சினைக்கு தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என ராகுல்காந்தியிடம் முறையிட்டனர். அதனை கேட்டு கொண்ட ராகுல்காந்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இதேபோல் பந்தலூர் பகுதியிலும் அவரை வரவேற்க ஏராளமான குழந்தைகள், காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    அப்போது குழந்தைகள் ராகுல் ஜி, ராகுல் ஜி என சத்தமாக அழைத்தனர். இதை கேட்ட ராகுல்காந்தி காரை நிறுத்துமாறு கூறி விட்டு, காரை விட்டு கீழே இறங்கினார்.

    அவரை குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ராகுல்காந்தி குழந்தைகளுடன் கைகுலுக்கி புகைப்படமும் எடுத்து கொண்டார்.

    பின்னர் ராகுல்காந்தி, காரில் ஏறி கையை அசைத்தவாறு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். தொடர்ந்து அவர் இரவில் சுல்தான்பத்தேரியில் தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று அவர் தனியார் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவை தொடங்கி வைக்கிறார். வயநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

    வயநாட்டில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நாளை கொச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகள் கோவையில் உள்ள தொழில் நுட்ப ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    உதகை:

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலிசார் கடந்த ஓராண்டுக்கு மேலாக விசாரித்து வரும் நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதியிடம் சிபிசிஐடி தரப்பு மனுதாக்கல் செய்தனர்.

    இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகள் கோவையில் உள்ள தொழில் நுட்ப ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அந்த ஆய்வத்தில் கடந்த 4 மாதங்களாக ஆய்வு செய்ய நிலையில் Recover செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் தகவல் பரிமாற்ற விபரங்களை அறிக்கையாகவும், ஆய்வு செய்யப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் பென் டிரைவ்கள் மூடி முத்திரையிட்ட கவரில் இன்று காலை உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • நஞ்சநாடு கிராமத்தில் லக்கிஷா ஹப்பா என்ற பெயரில் தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • திரண்டிருந்த யிரக்கணக்கான படுகர் இன மக்கள் கோவிந்தா.. கோவிந்தா... என்ற கோஷமிட்டு வழிபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகரின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    குறிப்பாக படுகரின மக்களின் கிராமங்களிலேயே பெரிய கிராமமாக ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு கிராமம் விளங்குகிறது.

    இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றி கார்த்திகை தீபம் கொண்டாடபட்ட நிலையில் பவுர்ணமி நாளன்று நஞ்சநாடு கிராமத்தில் லக்கிஷா ஹப்பா என்ற பெயரில் தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த படுகரின மக்களும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் படுகர் இன மக்களும் நஞ்சநாடு கிராமத்திற்கு வந்து குவிந்தனர்.

    இதனையடுத்து மாலை சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் தங்களது பாரம்பரிய உடையான வெண்மை நிற ஆடைகளை பெண்கள், ஆண்கள் சிறுவர், சிறுமிகள் என அனைவரும் அணிந்து தொட்டமனை எனப்படும் தங்களது மூததையர்கள் வசித்த வீட்டின் முன் குவிந்தனர்.

    அந்த இல்லத்தில் இருந்து பந்தம் எடுத்து வந்து சிறிய கொடி மரங்களில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் இளைஞர்கள் நடனமாடியவாறு ஊர் பெரியவர்கள் மற்றும் பூஜாரி ஆகியோரை தொட்டமனையிலிருந்து கிராமத்தின் மைய பகுதியில் உள்ள கோவில் வளாகத்திற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் அமர்ந்து இருந்த நிலையில் சிறப்பு அலங்காரத்துடன் இருந்த பிரமாண்ட கொடி மரத்திற்கு பூஜை செய்து 60 அடி உயரத்தில் தீபம் ஏற்றபட்டது.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் கோவிந்தா.. கோவிந்தா... என்ற கோஷமிட்டு வழிபட்டனர்.

    அதனை தொடர்ந்து பெரியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் கொடி கம்பத்தை சுற்றி பெரிய வட்டமாக நின்று தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.

    • பேருந்தில் இருந்து இறங்கிய சிறுமி லயா பேருந்தின் பின்புறமாக நடந்து சென்றுள்ளார்.
    • தப்பியோடிய ஓட்டுனர் தியாகராஜனை போலீசார் தேடி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தனியார் பள்ளி பேருந்தில் சிக்கி எல்கேஜி படிக்கும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய சிறுமி லயா பேருந்தின் பின்புறமாக நடந்து சென்றுள்ளார்.

    அதனை அறியாத ஓட்டுநர் பேருந்தை பின்புறமாக இயக்கிபோது டயரில் சிக்கி சிறுமி உயிரிழந்தார்.

    சிறுமியின் உடலை மீட்ட கோத்தகிரி போலீசார், தப்பியோடிய ஓட்டுனர் தியாகராஜனை தேடி வருகின்றனர்.

    • கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    கோத்தகிரி, 

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.

    இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லும் மஞ்சமலை சாலையில் பகல் நேரத்தில் சாலையில் ஒய்யாரமாக நடந்துச்சென்ற நான்கு கரடியால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

    நீண்ட நேரம் சாலையில் சுற்றி திரிந்த நான்கு கரடிகளும் அருகில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் சென்றன. அதன்பிறகே கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்தல், பெயர்நீக்கல் பணிகளை பார்வையிட்டனர்
    • பணிகளை சரியான முறையில் செய்வது குறித்து உரிய ஆலோசனை

    கோத்தகிரி, 

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வாக்குச்சாவடி மையங்களில் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி ஜி.டி. ஆர். பள்ளி, அரவேணு சக்கத்த அரசு பள்ளி, கீழ்கோத்தகிரி அரசு பள்ளி போன்ற அரசு பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்தல் மற்றும் பெயர் நீக்குதல் சேர்த்தல் முகாம் நடந்தது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை யும் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்குதலில் ஈடுபட்டனர்.

    இதனை குன்னூர் கோட்டாட்சியர் பூசன குமார், கோத்தகிரி கோமதி ஆகியோர் அனைத்து வாக்குச்சாவடிகளையும் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான வேலைகள் சரியான முறையில் செயல்படுவது குறித்தும் ஆலோசனை வழங்கினர். 

    • மூடுபனியுடன் கடும்குளிர் கொட்டுகிறது
    • பொதுமக்கள் முன்னெச்சரிகை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டுமென சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. அங்கு தற்போது சாரல் மட்டுமே பெய்கிறது. மேலும் ஊட்டியில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக மாலை நேரங்களில் கடுங்குளிர் காணப்படுகிறது.

    எனவே ஊட்டியில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட காலநிலை கார ணமாக பொதுமக்களுக்கு தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்கு உள்ள மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் நோயாளி களின் கூட்டம் அதிகளவில் காணப்படு கிறது.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மாறுபட்ட காலநிலை நிலவுவதால் பொதுமக்க ளுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சளித்தொல்லை போன்ற நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    எனவே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், பாதிக்கப்ப ட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    மேலும் மாறுபட்ட காலநிலையால் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து தங்களை காத்து கொள்ள குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதுதவிர காதுகளில் குளிர் காற்று புகாதவகையில் தொப்பி அல்லது மப்ளர் ஆகியவற்றை பயனபடுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • பொதுமக்கள் வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்

    ஊட்டி, 

    ஊட்டி எல்கில் பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு உலக புகழ் பெற்ற மலேசியா பத்துமலை முருகன் போலவே, 40 அடி உயரத்தில் முருகப்பெருமான் வெளிப்புறத்தில் கம்பீரமாக வேலூன்றி காட்சி அளிக்கிறார்.

    மேலும் இந்த கோவிலில் முருகப்பெருமானின் 6 படைவீடுகளை குறிக்கும் வகையில் 6 மண்டபங்கள், 108 திருநாமங்களை நினைவு கூறும் வகையில் 108 படிகள் ஆகியவை உள்ளன.

    கார்த்திகேயன் பிறந்த நாளே கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள்.

    அதன்படி இந்த திருத்தலம் கார்த்திகை தீபத்திருநாளுக்கு மிகவும் பிரசித்திபெற்ற தலம் ஆகும்.

    ஊட்டி எல்கில் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்-ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மாலை நேரத்தில் திருக்கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலை உச்சியிலும் மகாதீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களின் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடுகளை நடத்தினர்.

    • குன்னூரில் தொடர்மழை எதிரொலி
    • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    தொடர் மழை காரண மாக மலைப்பா தையில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் சுற்று லாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தற்போது தவிர்க்க வேண்டு மென மாவட்ட நிர்வாகம் அறிவு றுத்தி உள்ளது.

    இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தற்போது கூடலூர் மார்க்க மாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக வருகி றார்கள். இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு ள்ள மினி படகு இல்லத்தில் படகு சவாரி செய்வதற்காக ஆர்வத்துடன் சென்றனர்.

    ஆனால் மழை காரணமாக அங்குள்ள ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்க இயலாமல் திரும்பி சென்றனர்.

    ×