search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கேழ்வரகு அடை, பாசிபருப்பு பாயாசம், சிவப்பு அரிசிபுட்டு செய்து அசத்தல்
    • பர்லியார் பஞ்சாயத்துக்கு முதல் பரிசு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில், குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் வட்டார அளவிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இடையே பராம்பரிய சிறுதானிய உணவு தயாரிப்பு போட்டி நடைபெற்றது. திட்டஇயக்குனர் முத்து தலைமை தாங்கினார்.

    பராம்பரிய சிறுதானிய உணவு தயாரிப்பு போட்டியில் 6-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டு கேழ்வரகு அடை, பாசிபருப்பு பாயாசம், சிவப்பு அரிசிபுட்டு, கேழ்வரகு இடியாப்பம், அவல் வடை, எள்ளு சிம்லி, கம்பு குழிபணியாரம், கேழ்வரகு அல்வா, சத்துமாவு கேக், பிரண்டை துவையல், கொள்ளு அவல் கஞ்சி, உளுந்து பனைவெல்லம் கஞ்சி, எள் உருண்டை ஆகிய பல வகை உணவுகளை தயாரித்தனர்.

    இதில் சுவை மிகுந்த பாரம்பரிய உணவுகள் தயாரித்த மகளிர் குழுவினருக்கு ஊராட்சி ஒன்றிய தலைவி சுனிதா நேரு, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரமங்கலம் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் பர்லியார் பஞ்சாயத்து முதல் பரிசும், மேலூர் பஞ்சாயத்து 2-வது பரிசும், உபதலை பஞ்சாயத்து 3-வது பரிசும் பெற்றது. அவர்கள ஊட்டியில் வருகிற 21-ந்தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    • ஊட்டி, சி.எஸ்.ஐ., சி.எம்.எம். மேல்நிலைப்பள்ளியில் 28, 29-ந்தேதிகளில் நடக்கிறது
    • 24-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுகோள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 2023-2024-ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் 28.11.2023 அன்று அண்ணல் காந்தியடிகள் மற்றும் 29.11.2023 அன்று ஜவகர்லால் நேரு ஆகியோர்களின் பிறந்த நாளையொட்டி மாவட்ட த்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் ஊட்டி, சி.எஸ்.ஐ., சி.எம்.எம். மேல்நிலைப்பள்ளியில் பகல் 10 மணிக்கு நடத்தபெற உள்ளன.

    இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன.

    அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்த பெறும் பேச்சு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களில் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசு பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்க பெற உள்ளன.

    காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சு போட்டிக்கான தலைப்புகள் 1. காந்தியடி களின் வாழ்க்கை வரலாறு 2. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் 3. வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள், ஜவகர் லால் நேரு பிறந்த நாள் பேச்சு போட்டிக்கான தலைப்புகள்: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் 1. ஆசிய ஜோதி 2. மனிதருள் மாணிக்கம் போட்டி களுக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் குலுக்கல் சீட்டு முறையில் தெரிவு செய்து அந்த தலைப்பில் மட்டுமே பேசுவதற்கு அனு மதிக்க பெறுவர்.

    எனவே தரப்பட்டுள்ள அனைத்து தலைப்புகளிலும் பேசுவதற்கு உரிய தயாரிப்புடன் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

    மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்பு படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று 24.11.2023-க்குள் ootytamilvalarchi@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்புதல் வேண்டும். பேச்சு போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கின
    • சேரங்கோடு உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு

    ஊட்டி,

    கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சி கொளப்பள்ளி பகுதியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரெப்கோ வங்கியின் உதவியுடன் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து தொடங்கிவைக்கபட்டது.

    நிகழ்ச்சியில் சேரங்கோடு ஊராட்சி தலைவர், துணை தலைவர், பொதுமக்கள், வியாபார சங்க உறுப்பினர்கள், பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் நீலகிரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

    • குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவனத்தில் நேரடி ஆய்வு
    • கோவை பிரஸ் காலனி பகுதியில் மேலும் ஒரு ஆய்வகம் அமைக்க 30 ஏக்கர் நிலம் வாங்க திட்டம்

     அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாஸ்டியர் இன்ஸ்டியூட் ஆரம்பத்தில் ரேபிஸ் எனும் வெறிநாய்கடிக்கான தடுப்பூசி மற்றும் கக்குவான், ரண ஜன்னி உள்ளிட்ட முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் இடமாக இருந்தது.

    இந்நிலையில் இங்கு மத்திய அரசின் சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் உலகளாவிய நோய் தடுப்பு திட்டத்தில் முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்க 137 கோடி ரூபாயில் உலக தர கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் பாரதி பர்வீன் பவார் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அங்கு மருந்துகள் தயாரிக்கப்படும், இடங்களை பார்வையிட்டு ஆய்வக விவரங்களை கேட்டறிந்தார். பின்பு அவர் கூறியதாவது:-

    குன்னூர் பாஸ்டியர் நிறுவனம் 137 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவிட் 19 தடுப்பூசி ஆய்வகமாக செயல்பட்டது. இந்த ஆய்வகம் பல உயிர்காக்கும் மருந்துகளை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வகத்தை பலப்படுத்தும் வகையில் மற்றுமொரு ஆய்வகம் கோவையில் பிரஸ் காலனி பகுதியில் அமைக்க 30 ஏக்கர் நிலத்தை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இதனால் மேலும் பல அரியவகை உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க முடியும்.

    இப்பணிகளுக்காக பல ஆண்டுகளாக பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது. அவர்களை நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து குன்னூர் உப்பாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரி பாரதி பர்வீன் பவார், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்திற்கான காப்பீடு அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளாக தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 27 கோடி பேருக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இது மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட 27 ஆயிரம் மருத்துவமனைகளிலும் இதனை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 53 லட்சம் பேருக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். 

    • முதலில் பேட்டிங் செய்த மசினகுடி யூத் கிளப் அணி 10 ஓவா்களில் 63 ரன்கள் குவித்தது
    • 9.2 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் எடுத்து அசத்தல்

    ஊட்டி,

    ஊட்டி அருகே மசினகுடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. மாயாா், பொக்காபுரம், ஆச்சக்கரை, பூதநத்தம், செம்ம நத்தம், மாவனல்லா, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, ஆனைகட்டி, சிறியூா் உள்ளிட்ட பகுதிகளைச் சாா்ந்த 25 அணிகள் கலந்து கொண்டன.

    நாக்அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் அரை இறுதி ஆட்டத்துக்கு மசினகுடி ஸ்டாா் பாய்ஸ் - மாயாா் அணிகளும், மசினகுடி யூத் கிளப் - மசினகுடி புளூ போ்ட்ஸ் அணிகள் தகுதி பெற்று விளையாடின.

    அதில் மாயாா் அணியும் - மசினகுடி யூத் கிளப் அணியும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று விளையாடின.முதலில் பேட்டிங் செய்த மசினகுடி யூத் கிளப் ணிஅ நிா்ணயிக்கபட்ட 10 ஓவா்களில் 63 ரன்களை குவித்தது. பின்னா் ஆடிய மாயாா் அணி 9.2 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    முதலிடம் பெற்ற மாயாா் அணிக்கு கோப்பை ரூ.20 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த மசினகுடி யூத் கிளப் அணிக்கு ரூ.12,500 ரொக்கமும், கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த மசினகுடி ஸ்டாா் பாய்ஸ் அணிக்கு ரூ.7500 ரொக்கமும் கோப்பையும் வழங்கப்பட்டன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு கூடலூா் எம்.எல்.ஏ. பொன். ஜெயசீலன் பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

    • மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • குன்னூரில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஊட்டியை அடைந்தது

    அருவங்காடு,

    சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு தொடர்பான இருசக்கர வாகன பிரசார பேரணி நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் இந்த பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணி நேற்று குன்னூர் வந்தது. குன்னூரில் இருந்து ஊட்டி வரை நடந்த பேரணியை மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். பேரணி குன்னூரில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஊட்டியை அடைந்தது.

    நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி செயலளார் பரமேஸ்குமார், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர வாசிம் ராஜா, நகராட்சி உறுப்பினர்கள் ஜாகிர், சையது மன்சூர், கட்சி நிர்வாகிகள் பிரவீன், செலின் மற்றும் நிர்வாகிகள பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டன
    • அரசு பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் என்ற மாயன், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிகூர் ஊராட்சி அண்ணாநகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் கணினிகளை வழங்கினார்.

    அத்துடன் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் சிக்கன் பிரியாணி, முட்டை, இனிப்பு என அறுசுவை உணவை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பேசிய ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஏழை எளிய மக்கள் கல்வி பயிலும் இந்த அரசு பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார். தி.மு.க. குந்தா ஒன்றிய துணை செயலாளர் போர்த்தி ஜெகதிஸ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.  

    • நீலகிரி மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத் தலைமை தாங்கினார்
    • மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைசெயலாளர் பாலநந்தகுமார் பங்கேற்பு

    ஊட்டி,

    குன்னூர் சட்டமன்றத்துக்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சிகள் பூத் கமிட்டி புத்தகங்களை நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளளரும், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளருமான பொன்ராஜ் ஆய்வு செய்தார்.

    இதில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தேனாடு லட்சுமணன், பொதுக்குழ உறுப்பினர் மாதன் மற்றும் மாநில, மாவட்ட சார்பணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகரிய செயலாளர், பேரூராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்
    • தலைமை ஆசிரியர் வசந்தா, ஆசிரியர் ரீட்டாசகாயமேரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்

    ஊட்டி,

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் வளாகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாநிலம் முழுவதும் உள்ள சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து கேடயம் வழங்கினார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதில் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஒன்றியத்தில் உள்ள பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான கேடயம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதனை பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தா, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் ரீட்டாசகாயமேரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    இதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கோமதி தலைமை ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். வட்டார கல்வி அலுவலர் வனிதா பாராட்டினார். தலைமை ஆசிரியருடன் ஆசிரியர்கள் சுந்தரம், ரீட்டா சகாயமேரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    கேடயம் பெற்ற பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், பாராட்டினர். 

    • மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் தலைமையில் நடந்தது
    • பாராளுமன்ற தேர்தல் பணிகள், பூத் கமிட்டி குறித்து ஆலோசனை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் தலைமை தாங்கினார். குன்னூர் நகர செயலாளர் ராமசாமி வரவேற்றார்.

    கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளருமான பாண்டி செல்வம், 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் பிரேம்குமார், லாரன்ஸ், மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி, பேரூர் செயலாளர்கள் சஞ்சீவ், கிருஷ்ணகுமார், ரமேஷ், கண்ட்டோண்ட்மென்ட் நகரிய செயலாளர் மார்ட்டின், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஸ் குமார், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு.வாசிம் ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பில்லன், சதக்கத்துல்லா ,சீலா கேத்தரின், செல்வம், காளிதாஸ் மற்றும் குன்னூர் நகர நிர்வாகிகள் தாஸ், முருகேசன், சாந்தா சந்திரன், ஜெகநாத்ராவ், மாவட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், பழனிச்சாமி, சார்லி, கருணாநிதி மாவட்ட ஆதிதிராவிடர் குழு அமைப்பாளர் ராம்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பத்மநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் தலைமை கழக பேச்சாளர் ஜாகீர், குன்னூர் நகர தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஜெயராம் ராஜா, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பாக நிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் மேலூர் ஒன்றிய செயலாளர் லாரன்ஸ் நன்றி கூறினார்.

    • மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தலைமைதாங்கினார்
    • தனிமனித வாழ்க்கையில் கூட்டுறவு குறித்து அதிகாரிகள் பேச்சு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கி வருகிற 20-ந்தேதிவரை நடக்க உள்ளது. இதன் 3-வது நாள் நிகழ்ச்சி கூட்டுறவு விற்பனை சங்க மண்டபத்தில் நடந்தது.

    அப்போது கூட்டுறவு அமைப்புகளை கணினிமயமாக்குதல்-மேம்படுத்துதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தலைமைதாங்கினார்.

    ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், வாழ்வியல் மற்றும் தனிமனித வாழ்க்கையில் கூட்டுறவு மற்றும் அரசியலமைப்பு சட்டம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.

    நிகழ்ச்சியில் சரக துணைப்பதிவாளர் ரா.மது, நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியரும், கூட்டுறவு சார்பதிவாளருமான அய்யனார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நவம்பர் மாதம் 2-வது வாரமே தொடங்க வேண்டியது
    • டிசம்பர் முதல் வாரத்தில் கொட்டி தீர்க்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

    ஊட்டி,

    தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு ஒருசில மாதங்கள் தவிர மற்ற காலங்களில் இதமான காலநிலை நிலவும்.

    எனவே தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் திரண்டு வருகின்றனர். அங்கு நிலவும் இதமான காலநிலை மற்றும் பச்சைப்பசேல் இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதியில் பனிப்பொழிவு தொடங்கும். இது பிப்ரவரி மாதம் இறுதி வரை நீடிக்கும்.

    அதிலும் குறிப்பாக நவம்பர் மாதம் 2-வதுவாரம் முதல் ஜனவரி மாத இறுதிவரை உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    மேலும்ஊட்டி, குந்தா, கோரகுந்தா, நடுவட்டம், பைக்காரா, சோலூர், கிளன்மார்கன், எமரால்டு, அப்பர்பவானி, அவலாஞ்சி, தாய்சோலை போன்ற இடங்களில் பனிப்பொழிவின் தாக்கம் சற்று கூடுதலாக காணப்படும்.

    அத்தகைய நேரங்களில் நீலகிரியின் பல்வேறு பகுதிகளில்பகல் நேரங்களில் பனிக்காற்று வீசும். எனவே வெயில் அடித்தாலும்கூட குளிர் வாட்டும்.

    மேலும் பனிப்பொழி வின்போது கோரகுந்தா மற்றும் அப்பர்பவானி போன்ற பகுதிளில் '0' டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை குறைந்து காணப்படும்.

    அங்கு தற்போது உறைபனி காலம் இன்றும் தொடங்கவில்லை. கண்ணா மூச்சி காட்டி வருகிறது. எனவே ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் முதல் வாரத்திற்கு மேல் உறைபனி மொத்தமாக கொட்டி தீர்க்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் மலைக்காய்கறி உள்ளிட்ட விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு உறைபனி கொட்டும்போது சாகுபடி மற்றும் மகசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மேலும் நீலகிரியில் உறை பனிக்காலம் தொடங்கினால் அங்கு வசிக்கும் பொது மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும். 

    ×