என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காராமணிக்குப்பத்தில் சாலை விரிவாக்க பணியின் போது இடிக்கப்பட்ட கோவிலுக்கு பணம் தரவில்லை: பொதுமக்கள் புகார்
Byமாலை மலர்29 May 2023 8:12 AM GMT
- காராமணிக்குப்பம் குளக்கரை குப்பத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிந்தாமணி விநாயகர் கோவில் உள்ளது.
- விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் அடுத்த காராமணிக் குப்பம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-
கடலூர் - பண்ருட்டி மெயின் ரோட்டில் காராமணிக்குப்பம் குளக்கரை குப்பத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிந்தாமணி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை கடந்த 2002 -ம் ஆண்டு புதிதாக கும்பாபிஷேகம் நடைபெற்று பராமரித்து வந்தனர். தற்போது கடலூர் - மடப்பட்டு சாலை விரிவாக்க பணியின் போது கோவிலை இடித்து விட்டு அதனை கட்டித் தருவதாக தெரிவித்தனர். ஆனால் இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களிடம்இருந்து பணம் வாங்கி தருகிறோம் என தெரிவித்தனர். ஆனால் இது நாள் வரை கோவில் கட்டுவதற்கு பணம் வழங்கவில்லை. இது சம்பந்தமாக விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X