search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
    X

    பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களை படத்தில் காணலாம். 

    அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

    • அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு, ‘எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • 90 ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் 3-ம் பருவ பயிற்சி, வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    வாழப்பாடி:

    தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு, 'எண்ணும் எழுத்தும்' என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    அதன்படி சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 90 ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் 3-ம் பருவ பயிற்சி, வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் வழிகாட்டுதல் படி நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், ஒருங்கிணைப்பாளர் முதுநிலை விரிவுரையாளர் நாகலட்சுமி, வட்டார கல்வி அலுவலர்கள் நெடுமாறன், வித்யா, வட்டார மேற்பார்வையாளர் திலகவதி ஆகியோர் முன்னிலையில் கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர்.

    Next Story
    ×