search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
    X

    வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு

    • ரூ.18.89 லட்சம் மதிப்பீட்டில் ராயல் சிட்டியில் பூங்கா மேம்பாட்டு பணிகள் ஆய்வு.
    • ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியையும் பார்வையிட்டு ஆய்வு.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், குடவாசல் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இவ்ஆய்வில், மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உடனிருந்தார்.

    நீடாமங்கலம் ஒன்றியத்தி ற்குட்பட்ட, ஒளிமதி, ஒடந்துறை பகுதியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவரும் பயனா ளியிடம் வழங்கப்படும் மருந்துவ சிகிச்சைகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, நீடாமங்கலம் பேரூராட்சியில் ரூ.18.89 லட்சம் மதிப்பீட்டில் ராயல் சிட்டியின் பூங்காவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுவருவதையும், பாப்பையன் தோப்பு, பாலகிருஷ்ணா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிளவர் பிளாக் சாலையினையும், நீடாமங்கலம் அரசினர் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியினையும் பார்வை யிட்டு, மாணவ ர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், குடவாசல் பேரூராட்சியில் அகரஒகை காளியம்மன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதார் சாலையினையும், கொரடாச்சேரி ஒன்றியம், வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு கற்பிக்க ப்பட்டுவரும் பாடமுறைகள் குறித்து கேட்டறிந்து, குழந்தைகளுடன் கலந்துரை யாடினார்.

    இவ்ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர்கள் கீர்த்தனா மணி, சங்கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா, பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×