search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே கரடி தாக்கியதில் மூதாட்டி படுகாயம்
    X

    கோத்தகிரி அருகே கரடி தாக்கியதில் மூதாட்டி படுகாயம்

    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே உள்ள ராப்ராய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி ருக்குமணி (வயது75). இவர் தனியார் எஸ்டேட் குடியிருப்பில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் குழாய் அருகே சென்றுள்ளார்.

    அப்போது அங்குள்ள புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த கரடி ருக்குமணியை தாக்கியது. இதனால் கை, மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டி விட்டு, காயமடைந்த ருக்குமணியை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததுடன், காய்மடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வரும் ருக்மணிக்கு ஆறுதல் கூறினர். மேலும் வனவிலங்கு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×