search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தற்கொலை
    X

    கோப்பு படம்

    மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தற்கொலை

    • போடி அருகே மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே உள்ள தருமத்துப்பட்டி கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிங்கன் (வயது 78).

    இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. மேலும் அவரது மனைவியும் இறந்து விட்டதால் மிகுந்த சோகத்தில் இருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மகன் செல்வன் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×