search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து முதியவர் சாவு
    X

    விஷம் குடித்து முதியவர் சாவு

    • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே திம்மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் திம்மராயன் (வயது75). விவசாயி. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் உடனே அங்கு வந்து திம்மராயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திம்மராயன் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×