search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் மரம் விழுந்து முதியவர் பலி
    X

    கோவையில் மரம் விழுந்து முதியவர் பலி

    • எதிர்பாராத விதமாக திடீரென மரத்தின் கிளை முறிந்து முதியவரின் தலையில் விழுந்தது.
    • ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் தியாகராய புது வீதியில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு நேற்று மதியம் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மரத்தின் அடியில் அமர்ந்து இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மரத்தின் கிளை முறிந்து அவரது தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊர் என்பது தெரியவில்லை.இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×