என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பரமத்தி வட்டார வேளாண், உழவர் நலத்துறை சார்பில் சிறுதானிய சாகுபடி பயிற்சி முகாம்
- சிறுதானியங்களை சாகுபடி செய்வதற்கான விவசாயிகள் பயிற்சி முகாம் வில்லிபாளையம் மற்றும் பிள்ளைகளத்தூர் கிராமங்களில் நடைபெற்றது.
- இந்த முகாமில் நீர் பாசனம், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களை சாகுபடி செய்வதற்கான விவசாயிகள் பயிற்சி முகாம் வில்லிபாளையம் மற்றும் பிள்ளைகளத்தூர் கிராமங்களில் நடைபெற்றது.
இதில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர் பாபு, வேளாண்மை உதவி இயக்குநர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு சிறுதானிய விவசாயத்தில் கிடைக்கும் கூடுதல் வருமானம், பயிர் சாகுபடி முறைகள், நீர் பாசனம், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
மேலும் மானிய விலையில் இடுபொருட்கள்-விதைகள், மருந்து மற்றும் நுண்ணூட்ட உரக்கலவைகள், சிறுதானிய விற்பனை, லாபம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரகுபதி மற்றும் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்