search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில்  ஆய்வு கூட்டம்
    X

    பாட்டாளி மக்கள் கட்சியின் 5 ஊராட்சிகளின் ஒன்றிய கழக ஆய்வு கூட்டம் புலிக்கரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிக்கு எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சால்வை அணிவித்த காட்சி. 

    பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆய்வு கூட்டம்

    • கிளைச் செயலாளர்கள், கிளை உறுப்பினர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மத்திய ஒன்றியம், கம்மாளப்பட்டி, பி.கொல்ல அள்ளி, மோதுகொல்ல அள்ளி, பூகானஅள்ளி, காட்டம்பட்டி, ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு உட்பட்ட 36 கிளைகளில் உள்ள கிளைச் செயலாளர்கள், கிளை உறுப்பினர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆய்வு கூட்டத்திற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பி.சி.சம்பத், மாநிலத் துணைத்தலைவர் பாடி செல்வம், ஒன்றிய செயலாளர் சின்னசாமி, ஒன்றிய தலைவர் முருகன், ஒன்றிய அமைப்பு தலைவர் விநாயகம், ஊடகப் பேரவை செல்வநாயகம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×