search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வலங்கைமான் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    வலங்கைமான் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • ஏப்ரல் 1 முதல் 2 ஆகிய தேதிகளில் திருவிழா நடைபெறுகிறது.
    • பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மாரியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை பல்லக்கு திருவிழாவும், ஏப்ரல் 1 முதல் 2 வரை நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, இரவு, பகல் முழுவதும் தஞ்சாவூர், கும்பகோணம், நீடாமங்கலம், குடவாசல், பாபநாசம் மற்றும் மன்னார்குடி உள்ளிட்ட சுற்றுப்புற ஊர்களில் இருந்து பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில் வலங்கைமானுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×