search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரூ.1500 லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
    X

    ரூ.1500 லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

    • 2 ஆயிரம் லஞ்சமாக ஊராட்சி செயலாளர் சரவணன் கேட்டுள்ளார்.
    • பவுடர் தடவி கொடுத்த ரூ. 1500 கொடுத்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி.

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ,பொம்மிடி அருகே உள்ள கேத்துரெட்டிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் எடுத்து விடும் வேலை செய்து வந்தவர் கோபால்.

    கடந்த 2009 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பின்பு இவருக்கு அலுவலகத்தில் சேர வேண்டிய செட்டில் மெண்ட் தொகை பெறுவதற்கு ஊராட்சி செயலாளர் சரவணனிடம் சென்று மனு கொடுத்துள்ளார். அப்போது அவருக்கு சேர வேண்டிய 30 ஆயிரம் செட்டில்மெண்ட் தொகையை பெறுவதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக ஊராட்சி செயலாளர் சரவணன் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர் கோபால் தனது மகனிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    லஞ்சம் கொடுப்பதற்கு விருப்பமில்லாத கோபால் மற்றும் அவரது மகன் தர்மராஜன் ஆகியோர் தர்மபுரியில் உள்ள மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவில் சென்று புகார் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த பவுடர் தடவி கொடுத்த ரூ. 1500 கொடுத்தனர். அதை சரவணனிடம் கோபால் கொடுத்தார்.

    இதனையடுத்து அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நேற்று தருமபுரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார்.

    Next Story
    ×