search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவிலடி பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர தேர் பவனி
    X

    தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கோவிலடி பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர தேர் பவனி

    • பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேரில் எழுந்தருளப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திருத்தேர் பவனியில் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமாக மக்கள் கலந்து கொண்டனர்.

    பூதலூர்:

    பூதலூர் தாலுகாவில் உள்ள கோவிலடி அப்பால ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.

    கோவிலில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து வந்தனர்.

    கோவிலை சுற்றியுள்ள தெருக்களின் வழியாக வந்த திருத்தேர் கோவில் நிலையை அடைந்ததும் தேரின் மேல் இருந்த உற்சவமூர்த்திகள் கோயில் கொண்டு செல்லப்பட்டு திருத்தேர் பவனி நிறைவு பெற்றது.

    திருத்தேர் பவனியில் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமாக மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் பவனி ஏற்பாடுகளை கோவில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜனனி, செயல் அலுவலர் சிவேந்திரராஜா மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×