search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பாரப்பட்டியில்மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
    X

    பாப்பாரப்பட்டியில்மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

    • பாப்பாரப்பட்டியில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    • விபத்தில் காயமடைந்த முதியவரை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 69). இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் பாப்பாரப்பட்டியில் இருந்து தருமபுரியை நோக்கி சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவரது வண்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜரத்தினம் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜரத்தினம் வரும் வழியிலேயே உயிரிழந்தார் என்று தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    Next Story
    ×