search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மேட்டுப்பாளையத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு நிரம்பி வழியும் பெள்ளாதி குளம்
    X

    மேட்டுப்பாளையத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு நிரம்பி வழியும் பெள்ளாதி குளம்

    • மொங்கம்பாளையம், சிறுமுகை வழியாக மறுகால் பாய்கிறது
    • குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

    மேட்டுப்பாளையம்,

    கோவை, நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதிகளில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 1 வாரத்திற்கு மேலாக மழையின் தாக்கம் அதிக மாக இருந்து வருகிறது. இதனால் சாலையோரங்க ளில் மழைநீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    பல இடங்களில் விவசாய நிலங்கள் மழைநீரில் மிதந்து வருகின்றன.

    இந்நிலையில் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட காரமடை பெ ள்ளாதி குளத்திற்கு கட்டான்ஜி மலை, மருதூர், திம்மம்பா ளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, பிளிச்சி உள்ளிட்ட பகுதிக ளில் இருந்து வரும் மழைநீர் வந்தடையும். தற்போது இந்த குளத்தின் கொள்ளளவு நிரம்பி இதன் உபரிநீர் நேற்று முதல் வெளியேறி வருகிறது.

    தண்ணீர் குளத்தில் இருந்து வெளியேறி மொங்கம்பாளையம், குரும்பம்பாளையம், தேரம்பாளையம் சென்ன ம்பாளையம், பகத்தூர் மற்றும் சிறுமுகை வழியாக பவானி ஆற்றை அடையும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இந்த பெள்ளாதி குளம் ஓராண்டுக்கு பின் மீண்டும் நிரம்பி வழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×