search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை நகராட்சி அலுவலகத்தில்  தூய்மை பணிக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்ட காட்சி.

    சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணிக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்

    • மக்கள் பணிக்கான தூய்மை இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் மக்கள் பணிக்கான தூய்மை இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் சுரண்டை மகாத்மா காந்தி பஸ் நிலையத்தில் நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது.

    துணை தலைவர் சங்கராதேவி முருகேசன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பாரிஜான் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் குறித்து விளக்க உரையாற்றி, தூய்மை பணிக்கான மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றி, மக்களின் பங்கு குறித்து விளக்கினார்.

    தொடர்ந்து ஆணையாளர் உறுதிமொழி வாசிக்க மஸ்தூர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து சுரண்டை பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் அண்ணாசிலை வழியாக நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சாந்தி தேவேந்திரன், அருணகிரி சந்திரன், பாலசுப்பிரமணியன், கல்பனா அன்ன பிரகாசம், உஷா பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×