என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை உட்பட 4 பேர் பலி
- பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் குழந்தை உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர்
- பலியான சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
சென்னை புழல் காவாங்கரை பகுதியை சோ்ந்தவர் கணேசன் (வயது 32). இவருக்கு பத்மா (32) என்ற மனைவியும், தஷ்வந்த் (4) என்ற மகனும், தக்ஷித் என்ற 3 மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.பத்மாவின் குடும்பத்தினரும், அவரது தங்கையும், சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஷாம் சுந்தரின் மனைவியுமான மஞ்சு (28) குடும்பத்தினரும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்து விட்டு சென்னைக்கு மீண்டும் திரும்பினர். காரை கணேசன் ஓட்டினார்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருவளக்குறிச்சி பிரிவு சாலை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கணேசனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையின் மைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் கணேசன், அவரது மனைவி பத்மா, அவர்களுடைய 2 குழந்தைகள், ஷாம் சுந்தர், மஞ்சு, அவர்களுடைய குழந்தைகளான சிவானி (5), சக்தி (2) ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர்.இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசனின் 3 மாத கைக்குழந்தை தக்ஷித் பரிதாபமாக இறந்தான்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணம் புதுக்காலனியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40) லாரி டிரைவர். இவருடைய மகன் பரணி (6) .
நெற்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.இந்த நிலையில் அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு பரணி தனது தாயுடன் சென்றான். அப்போது அங்குள்ள சாலையில் சிறுவன் பரணி விளையாடி கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியாக வண்ணாரம் பூண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் கரும்பு ஏற்றி ெசன்ற டிராக்டர் சிறுவன் பரணி மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த சிறுவன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தான்.
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 61), விவசாயி. இவர் அதே ஊரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வயலில் புல் அறுக்க நடந்து சென்றார்.அப்போது ராமகிருஷ்ணன் வயல் பகுதியில் உள்ள கிணற்றின் அருகே மின்சார ஒயர் அறுந்து தொங்கி உள்ளது.இதை கவனிக்காத கண்ணன் அதனை மிதித்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் ஆலத்தூர் தாலுகா, புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அழகுராஜ் (43), எலக்ட்ரீசியன். இவர் அதே பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அழகுராஜ் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு காரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அழகுராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்