என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் 7 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் போக்குவரத்து விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 53 லட்சம் அபராதம் விதிப்பு
- பெரம்பலூரில் 7 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் போக்குவரத்து விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 53 லட்சம் அபராதம் விதிக்கபட்டது
- 7 நாட்களில் 144 ஆம்னி பஸ்களும், 136 இதர வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.
பெரம்பலூர்:
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்குச் செல்லும் மக்க–ளுக்காக சிறப்பு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அர–சுக்கு வரி செலுத்தாதது, டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் போன்றவை குறித்து கண்காணிக்க உத்த–ரவிடப்பட்டது. இதையடுத்து பெரம்ப–லூர் வட்டார போக்குவ–ரத்து அலுவலர் கணேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பு–சாமி மற்றும் அலுவலர்கள் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் பெரம்பலூர் திரு–மாந்துறை டோல்பிளாசா, நான்கு ரோடு, மூன்று ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடந்த வாகன சோதனைகளில் 144 ஆம்னி பஸ்களும், 136 இதர வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன. இதில் ஆம்னி பஸ்க–ளுக்கு 22 சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு ரூ.65 ஆயிரம் அபராதமும், பிற வாகனங்களுக்கு போக்கு–வரத்து விதிமுறைகளை மீறி வகையில் அதிக பாரம், அதிக ஆட்கள், ஒளிரும் பட்டைகள் இல்லாதது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு குறை–பாடுகள் காரணமாக சோதனை அறிக்கைகள் வழங்கபட்டு ரூ.88 ஆயிரம் அபராதமும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன், வாகன டிரை–வர்களிடம் போக்கு–வரத்து விதிமுறைகளை கடை–பிடித்து வாகனங்களை இயக்கி விபத்துகளை தவிர்க்க வேண்டும். போக்கு–வரத்து விதிமு–றைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் அதன் உரிமையாளர், டிரைவர்கள் மீது நடவ–டிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விதிமுறையை மீறி இயக்கப்படும் வாக–னங்களின் உரிமம் மற்றும் டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்