search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி வாலிபர் பலி
    X

    லாரி மோதி வாலிபர் பலி

    • லாரி மோதி வாலிபர் பலியானார்.
    • விபத்தில் பலத்த காயம் அடைந்த பரதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பரதன் (வயது 18). இவர் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே துறையூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பரதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரதன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மேலகுலத்தெருவை சேர்ந்த மணிவேலை (51) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    Next Story
    ×