search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பெரம்பலூரில் ஆசை வார்த்தை கூறி ரூ.8 கோடி மோசடி செய்த இளம்பெண் கைது
    X

    பெரம்பலூரில் ஆசை வார்த்தை கூறி ரூ.8 கோடி மோசடி செய்த இளம்பெண் கைது

    • பெரம்பலூரில் ஆசை வார்த்தை கூறி ரூ.8 கோடி மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்
    • இந்த வழக்கில் தொடர்புடைய ராதிகாவை அவரது சொந்த ஊரில் போலீசார் கைது செய்து அழைத்து வந்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த தனவேல் என்பவர், ஜேஎன்ஆர் டிரேடிங் என்ற என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறியதை நம்பி பணத்தை கட்டி ஏமாந்துவிட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.இதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்துவிசாரணை நடத்தியதில், கன்னியா குமரி மாவட்டம், கடியா ப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ஸ்டனிஸ்லாஸ் மகன் ஜெயபால், தோவாலை தாலுகா, விஷ்ணுபுரத்தை சேர்ந்த மதன் என்பவரின் மனைவி ராதிகா (வயது 28), அதே நிறுவனத்தை சேர்ந்த தர்மராஜ் ஆகியோர் புகார்தாரர் தனவேல் மற்றும் சில நபர்களிடமிருந்து ரூ. 8 கோடியே ஒரு லட்சத்தை ஆசை வார்த்தை கூறி பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவி ன்பேரில், ஏடிஎஸ்பி மதியழகன், மாவட்ட குற்றப்பிரிவி டிஎஸ்பி தங்கவேல் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விஜய லெட்சுமி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ராதிகாவை அவரது சொந்த ஊரில் போலீசார் கைது செய்து அழைத்து வந்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×