என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கொளக்காநத்தத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
- அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு கொளக்காநத்தத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
- ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமையில் நடைபெற்றது
குன்னம்,
குன்னம் சட்டமன்ற தொகுதி சார்பில் மறைந்த தமிழக முதல்வர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க .சார்பில் கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் தியேட்டரில் நடைபெற்றது.பொதுக்கூட்டத்திற்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமை வகித்தார் செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, குன்னம் பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தன், கொளக்காநத்தம் கிளை செயலாளர் துரைராஜ், வக்கீல் பெரியசாமி, ஒன்றிய ஐடி விங் செயலாளர் கதிர்வேல், கொளக்காநத்தம் கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் இளைஞரணி செயலாளருமான என்.ஆர்.சிவபதி, முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான அருணாசலம், முன்னாள் எம்பி சந்திரகாசி, மாவட்ட பொருளாளர் பூவை செழியன், முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், தலைமை கழக பேச்சாளர் நேமம் அன்பு முருகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வேப்பந்தட்டை சிவப்பிரகாசம் ரவிச்சந்திரன், பெரம்பலூர் செல்வகுமார் , எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ராஜாராம், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜ பூபதி, குரும்பலூர் பேரூர் செயலாளர் செந்தில்குமார், ஆலத்தூர் ஒன்றிய துணை சேர்மன் சுசீலா முருகேசன், முன்னாள் ஆலத்தூர் சேர்மன் வெண்ணிலா ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி , மகளிர் அணி ராஜேஸ்வரி, வக்கீல்கள் வெள்ளைச்சாமி பால்ராஜ், புதுக்குறிச்சி தங்கவேல், இளைஞர் அணி நாகராஜன், இன்ஜினியர் பிரபாகரன், காரை ஊராட்சி மன்ற தலைவர் கலையரசன், குறும்பாபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாவட்ட அவைத்தலைவர் குணசீலன் வரவேற்றார். முடிவில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் கர்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்