என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பாலையூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
- பாலையூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது
- விழாவையொட்டி வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க வேதபுரீஸ்வரர் வேதநாயகி திருக்கல்யாணம் நடைபெற்றது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க வேதபுரீஸ்வரர் வேதநாயகி திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று வெள்ளிகிழமை காலை கோவில் வளாகத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவையொட்டி நடராஜருக்கு பால், பழம், சந்தனம், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாலையூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருவாதிரை பிரசாதம் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்