search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்வர் கோப்பைக்கான தடகளப்போட்டி
    X

    முதல்வர் கோப்பைக்கான தடகளப்போட்டி

    • நாளை மறுநாள் தொடங்குகிறது
    • போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நாளை மறுநாள் முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2222 - 2023 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பைக்கு மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாளை மறுநாள் 8ம் தேதி தடகளம். சிலம்பம். கைப்பந்து ஆகிய போட்டிகளும் 11ம் தேதி கிரிக்கெட் 13ம் தேதி கபடி, இரவு பந்து, கைப்பந்து போட்டியிலும் 22ம் தேதி நீச்சல், கால்பந்து போட்டிகளிலும் 28ம் தேதி வலைப்பந்து, மேஜை பந்து போட்டிகளும் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன.கல்லூரி மாணவ மாணவி களுக்கான இம்மாதம் 9ம் தேதி தடகளம், கபடி, சிலம்பம், இறகுபந்து 15ம் தேதி கையுறைபந்து, கால்பந்து இறகு பந்து, கபடி, எறி பந்து போட்டிகள் காலை 8 மணி அளவில் நடைபெற உள்ளன. மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக தலா 3ஆயிரம் இரண்டாம் பரிசாக தலா 2ஆயிரம் மூன்றாம் பரிசாக தலா ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதலிடம் பெறுவோரும், குழு போட்டிகளில் தேர்ந்தெடு க்கப்பட்ட வீரர் வீரர்களுக்கும் மாநில போட்டிகளில் அரசு செலவில் பங்கேற்க அனுமதி க்கப்படுவர். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் வீரா ங்கனைகள் மாநில அளவிலான போட்டி களுக்கு அனுப்பி வைக்கப்ப டுவர். எனவே போட்டிகளில் கலந்து கொள்ள காலை 8 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703516 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்

    Next Story
    ×