search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பெரம்பலுார் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
    X

    பெரம்பலுார் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

    • பெரம்பலுார் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • மாணவர்கள் லைசென்ஸ் இன்றி இருசக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமலும் அதிவேகமாக சென்றும் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்விநிறுவன தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், எஸ்ஐ சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகையில், மாணவர்கள் எந்த செயலிலும் விழிப்புடன் செயல்பட வேண்டும். சில தவறான பழக்க வழக்கங்கள் குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

    மாணவர்கள் லைசென்ஸ் இன்றி இருசக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமலும் அதிவேகமாக சென்றும் விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதனால் பெற்றோர்களுக்கும் அம்மாணவர்களுக்குமே இழப்பு ஏற்படுகிறது. ஒருசில மாணவர்கள் விடுமுறை தினங்களில் நண்பர்களுடன் விளையாட செல்லும் போது ஏரி, குளங்கள், கிணறு போன்றவற்றில் இறங்கி விளையாட்டுதனமாக தங்கள் உயிரை இழக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒருசில மாணவர்கள் அதிகபடியான நேரங்களை செல்போனிலேயே செலவழித்து தேவையற்ற செயலிகளைப் பயன்படுத்தி அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி அறியாமல் தங்களை ஈடுபடுத்தி ஆபத்தை தேடிக் கொள்கின்றனர்.

    ஒருசில மாணவ, மாணவிகளுக்கு சில நபர்களால்பாலியல் வன்முறை நடைபெறுகிறது அதனை பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவிக்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி இறந்து போகின்றனர். இதை போன்ற பல்வேறு பிரச்சினைகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் மாணவர்களால் படிப்பில் ஆர்வம் செலுத்த முடியா மல் தங்கள் எதிர் கால த்தை வீணடித்துக் கொள்கி ன்றனர். எனவே, இந்த பழக்கங்கள் யாரிடமும் காணப்பட்டால் காவல்துறை உங்கள் நண்பன் என்பதை உணர்ந்து உங்களுக்காக உள்ள சைல்டு லைன் எண்ணை தொடர்பு கொண்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினர். காவல் துறை சார்பாக மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு வாசகங்களையும் அறிவுரைகளையும் பதாகைகளையும்வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பள்ளி மாண வர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் கலைச்செல்வி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் திவ்யராஜ் நன்றி கூறினார்.


    Next Story
    ×