search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யனார் கோவில் தேர் திருவிழா
    X

    அய்யனார் கோவில் தேர் திருவிழா

    • அய்யனார் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
    • மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் தேரோட்டம் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யனார் எழுந்தருளினார். பின்னர் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் வரகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. இதில் குன்னம், அந்தூர், கொளப்பாடி, வெண்மணி, வேட்டக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குன்னம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



    Next Story
    ×