search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரத்ததான முகாம்
    X

    ரத்ததான முகாம்

    • ரத்ததான முகாம் நடைபெற்றது
    • உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு லயன்ஸ் கிளப், உதிரம் நண்பர்கள் குழு ஆகியவை இணைந்து ரத்த தான முகாமினை நடத்தியது.

    முகாமிற்கு லயன்ஸ் கிளப் தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். உதிரம் நண்பர்கள் குழு தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்து முகாமினை தொடங்கிவைத்தார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் சரவணன் தலைமையில் செவிலியர்கள் கொண்ட குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதில் 26 யூனிட் ரத்தம் பெறப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

    முகாமில் நகராட்சி கவுன்சிலர்கள் ஷாலினி, மணிவேல் மற்றும் நாரணாயசாமி, லயன்ஸ் கிளப் செயலாளர்கள் தமிழ்மாறன், தமிழ்செல்வன் , பொருளாளர் ராஜேஸ், உதிரம் நண்பர்கள் குழு செயலாளர் நாகராஜ், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு நலசங்க செயலாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×