search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பெரம்பலூர் புத்தகத்திருவிழா இரண்டு நாட்கள் நீட்டிப்பு
    X

    பெரம்பலூர் புத்தகத்திருவிழா இரண்டு நாட்கள் நீட்டிப்பு

    • புத்தகப்பிரியர்கள் கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது
    • புத்தக திருவிழாவில் நடைபெற்ற புத்தக அரங்கிற்கு கலெக்டர் தலைமை வகித்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் நகராட்சி திடலில் புத்தக திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. புத்தக திருவிழா நேற்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் புத்தக பிரியர்களின் கோரிக்கையினை ஏற்று இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) என 2 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். மேலும் புத்தக திருவிழாவில் நேற்று இரவு நடந்த சிந்தனை அரங்கிற்கு கலெக்டர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணையர் டாக்டர் தரேஸ் அகமது கலந்து கொண்டு பேசினார். மேலும் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்கிற தலைப்பில் கவிதை பித்தனும், பாரதி ஏற்றிய பைந்தமிழ் நெருப்பு என்கிற தலைப்பில் மல்லூரியும், என் குறிப்பு என்கிற தலைப்பில் தாமோதரனும் கருத்துரையாடினர்.

    Next Story
    ×