search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலெக்டரிடம் மனு
    X

    கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலெக்டரிடம் மனு

    • கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்
    • 3 நாட்களாக சர்வர் பிரச்சனை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மூலம் சிக்னல் பெற்று செட்டாப் பாக்ஸ்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக கேபிள் டிவி இணைப்பு வழங்கி சேவை செய்து வருகிறோம். சில மாதங்களாக செட்டாப் பாக்ஸ்கள் வழங்காமல் பல வாடிக்கையாளர்களை இழந்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 19ம்தேதி அதிகாலை 5மணி முதல் 3 நாட்களாக இதுவரை சர்வர் பிரச்சனையில் கேபிள் டிவி கனெக்சன் கிடைக்கவில்லை.

    இதனால் அரசு கேபிள் டிவி கனெக்சன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் டிவி பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சர்வர் பிரச்சனையை சரி செய்து அரசு கேபிள் டிவி கனெக்சன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×