search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்களை விற்றவர் மீது வழக்குப்பதிவு
    X

    புகையிலை பொருட்களை விற்றவர் மீது வழக்குப்பதிவு

    • புகையிலை பொருட்களை விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • மளிகை கடை நடத்தி வருகிறார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 32). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக வி.களத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவரது கடையில் நடத்திய சோதனையில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 6 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லோகேஸ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    Next Story
    ×