என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மகளிர் தின விழா கொண்டாட்டம்
- பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் சார்பில் நடைபெற்றது
- 6 ஆயிரம் மாணவிகள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பல்கலைக் கழகத்தின் வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதனைத் தொடர்ந்து வேந்தர் சீனிவாசன், இணைவேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தனர். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா வரவேற்புரை வழங்கினார்.இந் நிகழ்வின் துவக்கத்தில் வேந்தர் தலைமை உரையாற்றும் போது, பெண்களின் முக்கியத்துவம் குறித்தும் பெற்றோர்களின் பெருமை குறித்தும் வாழ்நாட்களில் நாம் வணங்கக்கூடிய தெய்வம் நம் பெற்றோர்கள் என்ற பொன்னான கருத்துகளை முன் மொழிந்தார்.இணைவேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் தம் உரையில், பெண்ணினத்தின் பெருமையினையும் பெண்களுக்கான வளர்ச்சி நிலைகளையும் எடுத்துக்கூறினார்.சிறப்பு விருந்தினர்களாக கலெக்டர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளா தேவி, வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அ.லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி ஆகியோர் கலந்து கொண்டு பெண்களின் சிறப்பை பற்றி பேசினர்.இதனைத் தொடர்ந்து தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் அனைத்து கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி முதல்வர் சாந்தா, நன்றியுரை வழங்கினார்.நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரி முதல்வர்கள். புல முதன்மையர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் தனலட்சமி சீனிவாசன் கல்வி குழுமத்தில் பயிலும் 6000 மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்