search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • இந்தநிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    • அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வெங்கடேசன் தலைமை தாங்கினார்.வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், நுகர்வோர் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவிகளிடையே பேசினார்கள். அப்போது மாணவர்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றி தெரிந்து கொள்வதின் அவசியம், அதனை பொதுமக்களிடத்தில் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழி வகைகள் பற்றி எடுத்துரைத்தனர்.இந்தநிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.முன்னதாக பள்ளியின் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பச்சமுத்து வரவேற்றார். முடிவில் ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.










    Next Story
    ×