search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் மோதி டிரைவர் பலி
    X

    அரசு பஸ் மோதி டிரைவர் பலி

    • அரசு பஸ் மோதி டிரைவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கோபி என்ற நாகராஜ் (வயது 45), லாரி டிரைவர். இவர் நேற்று இரவு குரும்பலூர் பழைய சினிமா தியேட்டர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு டவுன் பஸ் நாகராஜ் மீது மோதியது. இதில் கீழே விழுந்த நாகராஜ் மீது அந்த பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×