search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
    X

    மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

    • மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள திருவாலந்துறையை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 56). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான வயலில் உள்ள மின் மோட்டாருக்கான சுவிட்சை போட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சின்னத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×