search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கிணற்றில் விழுந்து தவித்த   விவசாயி
    X

    கிணற்றில் விழுந்து தவித்த விவசாயி

    • பெரம்பலூர் அருகே எறையசமுத்திரம் காட்டு கொட்டாயை பகுதியை சோ்ந்த விவசாயி கிணற்றில் விழுந்து தவித்தார்
    • பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே எறையசமுத்திரம் காட்டு கொட்டாயை பகுதியை சோ்ந்தவர் சிவா (வயது 40), விவசாயி. இவர் நேற்று மதியம் அருகே வயலில் உள்ள கிணற்றில் இறங்கி பழுதான மோட்டாரை தூக்க சென்றார். பின்னர் அவர் கிணற்றில் இருந்து மேலே ஏற முயன்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். பின்னர் சிவா கிணற்றில் இருந்து மேலே ஏற முடியாமல் தவித்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி சிவாவை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    Next Story
    ×